மானிப்பாய் ஸ்ரீ ஆனந்தன் வைரவர் ஆலயம்.
Manipay Sri Ananthan Vairavar Aalayam.
ஸ்ரீ வைரவர் வழிபாடு.Sri Vairavar Valipadu.
அனைத்து ஆனந்தன் வைரவர் அடியவர்களுக்கும் தெரியப்படுத்துகிறேன் மானிப்பாய் ஸ்ரீ ஆனந்தன் வைரவர் ஆலயத்தின் முழுபதிப்பு உரிமையும் கொண்ட ஒரே ஒரு இணையதளம் www.sriananthanvairavar.blogspot.com. மட்டும்
இவ் இணையத்தளத்தை பார்ப்பதோடு உங்கள் உறவுகளுக்கும் தெரியப்படுத்துங்கள்

மேலும் பதிவுகள் தொடர்ந்து வரவுள்ளது...........

ராசிகளின் ராஜா

     பிருஹத்ஜாதகம் என்ற நூலில் பனிரெண்டு ராசிகளும் வைரவருடைய உடலின் அங்கங்களாக இருப்பதாகவும் அவை 
1 . மேஷம் - சிரசு.
2 . ரிஷபம் - வாய்.
3 . மிதுனம் - இருகைகள்.
4 . கடகம் - மார்பு.
5 . சிம்மம் - வயிறு.
6 . கன்னி - இடை.
7 . துலாம் - புட்டங்கள்.
8 . விருச்சிகம் - மர்ம ஸ்தானங்கள்.
9 . தனுசு - தொடை.
10 . மகரம் - முழங்கால்கள்.
11 . கும்பம் - காலின் கீழ்பகுதி.
12 . மீனம் - கால்களின் அடிப்பாகம்.
என பனிரெண்டு ராசிகளும் நிறைந்துள்ளது.

    மேலும் வைரவரின் சேவகர்களாக நவக்கோளங்களும் இருப்பதால் தன்னை வணங்கக்கூடிய அன்பர் எந்த ராசியைச் சேர்ந்தவராயினும் நவக்கோல்களில் எந்தக்கோளின் தாக்கத்தால் பாதிப்பு வந்தாலும் கெடுதல்கள் அனைத்திலிருந்தும் விடுவிப்பார்.

அசுரர்களை அழிக்க வைரவர் தோன்றல்

     ஒரு சமயம் அந்தகாசுரன் என்னும் அரக்கனின் அட்டூழியங்களை ஒழிக்க தேவர்கள் சிவனாரை வேண்ட ஈசன் தன் இதய அக்கினியிலிருந்து வைரவரை உருவாக்க அது விஸ்வரூபமெடுத்து ஒன்றாகி, ஒன்றிலிருந்து எட்டாகி,எட்டிலிருந்து அறுபத்து நான்காகி அசுரர்களை முழுவதுமாக அழித்து தேவர்களுக்கு அமைதியை வழங்கியதாகவும் இதனால் மகிழ்வடைந்து தேவர்கள் அறுபத்துநான்கு யோகினிகளை அவர்களுக்கு திருமணம் முடித்து வைத்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.ஆனால் தற்சமயம் தம்முடைய வழிபடும் முறை இருந்து வருகிறது. ஆக அஷ்ட வைரவர்கள் மற்றும் அஷ்ட வைரவ யோகினிகள் யார், யார் என்பதைக் காண்போம். 
1 . அசிதாங்க வைரவர் - பிராம்ஹி, 
2 . குரு வைரவர் - மாகேஸ்வரி,
3 . சண்ட வைரவர் - கவுமாரி,
4 . குரோதான வைரவர் - வைஷ்ணவி,
5 . உன்மத்த வைரவர் - வாரஹி,
6 . கபால வைரவர் - இந்திராணி,
7 . பீஷண வைரவர் - சாமுண்டி,
8 . சம்ஹார வைரவர் - சண்டிகா தேவி
ஆகியோர் ஆவர்.

பிரம்மனின் செருக்கு அழித்தல்

     ஒரு காலத்தில் ஐந்து தலைகளுடன் விளங்கிய பிரம்மா தனக்கும் ஐந்து தலை, ஈசனுக்கும் ஐந்து தலை. ஆகவே தானே உயர்ந்தவன். தன்னைப்போற்ற வேண்டும், துதிக்க வேண்டும் என்று சித்த, ரிஷி, முனிவர்களை வற்புறுத்த தொடங்கவே அவர்கள் சிவனாரை தரிசித்து பிரம்மனின் ஆணவபோக்கை எடுத்துக் கூற வைரவபெருமனை அழைத்து பிரம்மாவின் ஐந்தாவது தலையை நிக்கி அவரை நான்முகன் ஆக்கினார். பிரம்மாவை நான்முகன் ஆக்கிய சிவசொரூபமே ஸ்ரீ வைரவர் என்று காசி காண்டம் சொல்கிறது.

உங்கள் கருத்து.....