மானிப்பாய் ஸ்ரீ ஆனந்தன் வைரவர் ஆலயம்.
Manipay Sri Ananthan Vairavar Aalayam.
ஸ்ரீ வைரவர் வழிபாடு.Sri Vairavar Valipadu.
அனைத்து ஆனந்தன் வைரவர் அடியவர்களுக்கும் தெரியப்படுத்துகிறேன் மானிப்பாய் ஸ்ரீ ஆனந்தன் வைரவர் ஆலயத்தின் முழுபதிப்பு உரிமையும் கொண்ட ஒரே ஒரு இணையதளம் www.sriananthanvairavar.blogspot.com. மட்டும்
இவ் இணையத்தளத்தை பார்ப்பதோடு உங்கள் உறவுகளுக்கும் தெரியப்படுத்துங்கள்

மேலும் பதிவுகள் தொடர்ந்து வரவுள்ளது...........

ஸ்ரீ அஷ்ட வைரவர்

ஸ்ரீ அஷ்ட பைரவர் 

1 ஸ்வர்ண பைரவர் 

2 வித்யா பைரவர் 

3 வீரபைரவர் 

4 சம்ஹார பைரவர் 

5 யோக பைரவர் 

6 கால பைரவர் 

7 ஆனந்த பைரவர் 

8 சந்தான பைரவர்

அறுபத்தி நான்கு வைரவ மூர்த்திகள்

 அறுபத்தி நான்கு பைரவ மூர்த்திகள் 

    ஒரே பைரவர் எட்டுவகை செயல்கள் புரியும் போது அஷ்டபைரவர் என்றும் அவர்களே அறுபத்து நான்கு செயல்புரியும் போது அறுபத்து நான்கு பைரவர்களாக காட்சியளிக்கிறார்கள் . 

1 நீலகண்ட பைரவர் 

2 விசாலாக்ஷ பைரவர் 

3 மார்த்தாண்ட பைரவர் 

4 முண்டனப் பைரவர் 

5 ஸ்வஸ்சந்த பைரவர் 

6 அதிசந்துஷ்ட பைரவர் 

7 கேர பைரவர் 

8 ஸம்ஹார பைரவர் 

9 விஸ்வரூப பைரவர் 

10 நானாரூப பைரவர் 

11 பரம பைரவர் 

12 தண்டகர்ண பைரவர் 

13 ஸ்தாபாத்ர பைரவர் 

14 சீரீட பைரவர் 

15 உன்மத்த பைரவர்

16 மேகநாத பைரவர் 

17 மனோவேக பைரவர் 

18 க்ஷேத்ர பாலக பைரவர் 

19 விருபாக்ஷ பைரவர் 

20 கராள பைரவர் 

21 நிர்பய பைரவர் 

22 ஆகர்ஷ்ண பைரவர் 

23 ப்ரேக்ஷத பைரவர் 

24 லோகபால பைரவர் 

25 கதாதர பைரவர் 

26 வஞ்ரஹஸ்த பைரவர் 

27 மகாகால பைரவர் 

28 பிரகண்ட பைரவர் 

29 ப்ரளய பைரவர் 

30 அந்தக பைரவர் 

31 பூமிகர்ப்ப பைரவர் 

32 பீஷ்ண பைரவர் 

33 ஸம்ஹார பைரவர் 

34 குலபால பைரவர் 

35 ருண்டமாலா பைரவர் 

36 ரத்தாங்க பைரவர் 

37 பிங்களேஷ்ண பைரவர்

38 அப்ரரூப பைரவர் 

39 தாரபாலன பைரவர் 

40 ப்ரஜா பாலன பைரவர் 

41 குல பைரவர் 

42 மந்திர நாயக பைரவர் 

43 ருத்ர பைரவர் 

44 பிதாமஹ பைரவர் 

45 விஷ்ணு பைரவர் 

46 வடுகநாத பைரவர் 

47 கபால பைரவர் 

48 பூதவேதாள பைரவர் 

49 த்ரிபநேத்ர பைரவர் 

50 த்ரிபுராந்தக பைரவர் 

51 வரத பைரவர் 

52 பர்வத வாகனே பைரவர் 

53 சசிவாகன பைரவர் 

54 கபால பூஷண பைரவர் 

55 ஸர்வவேத பைரவர் 

56 ஈசான பைரவர் 

57 ஸர்வபூத பைரவர் 

58 ஸரட்வபூத பைரவர் 

59 கோரநாத பைரவர்

60 பயங்க பைரவர் 

61 புத்திமுக்தி பயப்த பைரவர் 

62 காலாக்னி பைரவர் 

63 மகாரௌத்ர பைரவர் 

64 தக்ஷிணா பிஸ்தித பைரவர்

ஸ்ரீ வைரவரை போற்றும் தேவாரம் பாடல்

 ஸ்ரீ பைரவரை போற்றும் தேவாரம் பாடல் 

விரித்த பல்கதிர்கொள் சூலம் 

வெடிபடு தமருகம்கை 

தரித்ததோர் கோலகால பைரவனாகி 

வேழம் உரித்து உமை அஞ்சக் கண்டு 

ஒண்திருமேனி வாய் விள்ளச் 

சிரித்தருள் செய்தார் சேறைச்

 செந்நெறிச் செல்வனாரே 


         திருச்சேறை ஸ்தலத்தில் ( கும்பகோணம் திருவாரூர் பாதையில் உள்ள ஸ்தலம் ) சாரபரமேஸ்வரர் ஆலயத்தில் காலபைரவர் அற்புதமாகக் காட்சி தருகிறார் . அவரை வழிபட்ட திருநாவுக்கரசர் பாடிய பதிகம் இது .

வைரவ தீபம்

     வைரவப்பெருமானுக்கு சிறு துணியில் மிளகை சிறு மூட்டையாகக்கட்டி நல்லெண்ணை அகல் தீபத்தை ஏற்றி வழிபட எல்லா வளமும் பெருகும். தேங்காய் மூடியில் நெய் நிரப்பி தீபம் ஏற்றி வழிபடலாம். அதேபோல் பூசணிக்காயை மத்தியில் இரண்டாகப்பிளந்து அதனுள் எண்ணை அல்லது நெய் நிரப்பி தீபம் ஏற்றி வழிபடலாம்.

வைரவ வழிபாடு

     வைரவப்பெருமானை காலையில் வழிபட சர்வநோய்களும் நீங்கும். பகலில் வழிபட விரும்பிய யாவும் கிட்டும். மாலையில் வழிபட்ட இதுவரை செய்த பாவம் யாவும் விலகும். இரவு அதாவது அர்த்த சாமத்தில் வழிபட வாழ்வில் எல்லா வளமும் பெருகி மண் ஒருமைப்பாடும் கிடைத்து முக்திநிலை என்ற இறைப்பரம்பொருளான வைரவப்பெருமானை அடையும் சாகாக்கல்வியும், மரணமில்லாப்பெருவாழ்வும் கூட கிட்டும்.

பிடித்த உணவுப்பொருட்கள்

     வைரவப்பெருமானுக்கு சர்க்கரைப்பொங்கல், தயிர்சாதம், தேன், செவ்வாழை, வெள்ளப்பாயசம், அவல் பாயசம், நெய்யில் போட்டு எடுக்கப்பட்ட உளுந்து வடை, சம்பா அரிசி சாதம், பால் மற்றும் பல பழவகைகள் வைத்து வழிபாடு செய்வது மிகவும் உத்தமம்.

பிடித்த மாலைகள்

     வைரவருக்கு தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலை அணிவித்து மல்லிகைப்பூ தவிர்த்து செவ்வரளி, மஞ்சள், செவந்தி மற்றும் வாசனை மலர்களைக்கொண்டு அர்ச்சனை செய்வது உத்தமம்.

சந்தன காப்பு அபிஷேகம்

     வைரவமூர்த்திக்குப் பிடித்தமானது சந்தன காப்பு. இதில் வாசனை திரவியங்களான புனுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ, பச்சை கற்பூரம் சேர்ந்தது சந்தனக்காப்பு செய்து வழிபடுவது என்பது தேவர்களின் ஆண்டுக்கணக்கில் ஒரு கோடி ஆண்டு வைரவலோகத்தில் வாழ்ந்ததற்கு சமமாக இன்புற்று வாழ்வர் என்று சிவபுராணம் கூறுகிறது. பால், தேன், பன்னீர், பழரசம் அபிஷேகமும் மிக விஷேம். 

சனீஸ்வரருக்கு அருளுதல்

    சூரிய பகவானின் புத்திரர்களாகிய எமதருமரும் சனியும் சகோதரர்களாவார்கள். இதிலே எமதருமர் நல்ல அழகுடனும், ஆரோக்கியத்துடனும் திகழ்ந்து, சனி ஊனமான காலுடன் சற்று அழகு குறைந்தும் காணப்பட்டதால் தனது சகோதரனால் அலட்சியப்படுத்தப்பட்டு வந்தார். இதனால் மனம் வருந்திய சனி தனது தாயான சாயாதேவியிடம் மனவருத்தத்தை எடுத்துக்கூற நீ இன்று முதல் வைரவரை உள்ளன்போடு வழிபட்டு வா. அவர் உனக்கு நல்ல நிலையைத்தருவார். உனது மனத்துயரம் யாவும் தீர்ந்து போகும் என்று தாயார் கூறிய அறிவுரையை ஏற்று சனியும் வைரவப்பெருமானை வழிபாடு செய்து வரலானார். சனியின் உண்மை அன்பால், கள்ளமில்லா வழிபாட்டால் மனம் மகிழ்ந்து வைரவர் சனியின் உண்மை அன்பை மக்களுக்கு எடுத்துக்காட்டும் விதமாக ஈஸ்வரப்பட்டம் அளித்து சனீஸ்வரராக நவக்கோல்களில் சக்தி மிகுந்த கோளாக உயர்த்தி பெருமைப்படுத்தினார். ஆகவே வைரவமூர்த்தியை வழிபட 
1 . ஏழரைச்சனி.
2 . அஷ்டமச்சனி.
3 . கண்டச்சனி.
4 . ஜென்மச்சனி.
5 . அர்த்தாஷ்டமச்சனி
போன்ற சனி தோஷங்கள் பனி போல் விலகிடும்.

     வைரவப்பெருமானை வழிபட ஒவ்வொரு மாத அஷ்டமியும் மிகச் சிறந்த நாளே. ஏனெனில் அன்றைய நாளில் அஷ்டலட்சுமிகளும் வைரவரை வழிபடுவதாகவும் அதனால் அன்று அவரை வணங்கிட மக்கள் அனைத்து வளங்களையும் பெற்று சிறப்புடன் வாழலாம். மேலும் ஒவ்வொரு மாத தேய்பிறை அஷ்டமிக்கும் ஒவ்வொரு சிறப்புப்பெயர் உண்டு.

மார்கழி - சங்கராஷ்டமி.
தை - தேவதேவாஷ்டமி.
மாசி - மகேஸ்வரராஷ்டமி.
பங்குனி - திரியம்பகாஷ்டமி.
சித்திரை - ஸ்நாதனாஷ்டமி.
வைகாசி -சதாசிவாஷ்டமி.
ஆனி - பகவதாஷ்டமி.
ஆடி - நீலகண்டாஷ்டமி.
ஆவணி - ஸ்தழனு அஷ்டமி.
புரட்டாசி - சம்புகாஷ்டமி.
ஐப்பசி - ஈசானசிவாஷ்டமி.
கார்த்திகை - காலவைரவராஷ்டமி.

     மேலும் காலவைரவாஷ்டமி எமவாதனை நீக்கம் மகதேவாஷ்டமி ஆகும். வைரவருக்கு அர்த்தசாம பூஜை மிக விசேஷமானதாகும்.

சக்திபீட காவலர்

     தாட்சாயணி தேவி தன் தந்தை தட்சன் செய்த யாகத்தில் தனது மருமகனான சிவனாருக்கு யாகத்தில் தரவேண்டிய அவிர்பாகத்தை தராது அவமதித்ததால் தச்சனின் மகளான பார்வதிதேவி யாக குண்டத்தில் தனது உயிரைத்தியதாகம் செய்தபோது அதனால் உக்கிரநிலை அடைந்த சிவனார் தாட்சாயணியின் உடலைத்தாங்கி உலகமெல்லாம் சுற்றி அலைந்தபோது திருமால் தன் சக்கரத்தால் தேவியின் உடலை பல கூறுகளாக்கி இப்பூலோகத்தில் பல இடங்களில் விழச்செய்தார் என்றும் தேவியின் உடலுறுப்புக்கள் விழுந்த ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு சக்தி பீடங்களுக்குப் பாதுகாவலராக வைரவ வேடம் தாங்கி சிவப்பிரானே காவல் காத்து வருவதாகவும் புராணங்கள் கூறுகின்றன.
SO question 2310734

ராசிகளின் ராஜா

     பிருஹத்ஜாதகம் என்ற நூலில் பனிரெண்டு ராசிகளும் வைரவருடைய உடலின் அங்கங்களாக இருப்பதாகவும் அவை 
1 . மேஷம் - சிரசு.
2 . ரிஷபம் - வாய்.
3 . மிதுனம் - இருகைகள்.
4 . கடகம் - மார்பு.
5 . சிம்மம் - வயிறு.
6 . கன்னி - இடை.
7 . துலாம் - புட்டங்கள்.
8 . விருச்சிகம் - மர்ம ஸ்தானங்கள்.
9 . தனுசு - தொடை.
10 . மகரம் - முழங்கால்கள்.
11 . கும்பம் - காலின் கீழ்பகுதி.
12 . மீனம் - கால்களின் அடிப்பாகம்.
என பனிரெண்டு ராசிகளும் நிறைந்துள்ளது.

    மேலும் வைரவரின் சேவகர்களாக நவக்கோளங்களும் இருப்பதால் தன்னை வணங்கக்கூடிய அன்பர் எந்த ராசியைச் சேர்ந்தவராயினும் நவக்கோல்களில் எந்தக்கோளின் தாக்கத்தால் பாதிப்பு வந்தாலும் கெடுதல்கள் அனைத்திலிருந்தும் விடுவிப்பார்.

அசுரர்களை அழிக்க வைரவர் தோன்றல்

     ஒரு சமயம் அந்தகாசுரன் என்னும் அரக்கனின் அட்டூழியங்களை ஒழிக்க தேவர்கள் சிவனாரை வேண்ட ஈசன் தன் இதய அக்கினியிலிருந்து வைரவரை உருவாக்க அது விஸ்வரூபமெடுத்து ஒன்றாகி, ஒன்றிலிருந்து எட்டாகி,எட்டிலிருந்து அறுபத்து நான்காகி அசுரர்களை முழுவதுமாக அழித்து தேவர்களுக்கு அமைதியை வழங்கியதாகவும் இதனால் மகிழ்வடைந்து தேவர்கள் அறுபத்துநான்கு யோகினிகளை அவர்களுக்கு திருமணம் முடித்து வைத்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.ஆனால் தற்சமயம் தம்முடைய வழிபடும் முறை இருந்து வருகிறது. ஆக அஷ்ட வைரவர்கள் மற்றும் அஷ்ட வைரவ யோகினிகள் யார், யார் என்பதைக் காண்போம். 
1 . அசிதாங்க வைரவர் - பிராம்ஹி, 
2 . குரு வைரவர் - மாகேஸ்வரி,
3 . சண்ட வைரவர் - கவுமாரி,
4 . குரோதான வைரவர் - வைஷ்ணவி,
5 . உன்மத்த வைரவர் - வாரஹி,
6 . கபால வைரவர் - இந்திராணி,
7 . பீஷண வைரவர் - சாமுண்டி,
8 . சம்ஹார வைரவர் - சண்டிகா தேவி
ஆகியோர் ஆவர்.

பிரம்மனின் செருக்கு அழித்தல்

     ஒரு காலத்தில் ஐந்து தலைகளுடன் விளங்கிய பிரம்மா தனக்கும் ஐந்து தலை, ஈசனுக்கும் ஐந்து தலை. ஆகவே தானே உயர்ந்தவன். தன்னைப்போற்ற வேண்டும், துதிக்க வேண்டும் என்று சித்த, ரிஷி, முனிவர்களை வற்புறுத்த தொடங்கவே அவர்கள் சிவனாரை தரிசித்து பிரம்மனின் ஆணவபோக்கை எடுத்துக் கூற வைரவபெருமனை அழைத்து பிரம்மாவின் ஐந்தாவது தலையை நிக்கி அவரை நான்முகன் ஆக்கினார். பிரம்மாவை நான்முகன் ஆக்கிய சிவசொரூபமே ஸ்ரீ வைரவர் என்று காசி காண்டம் சொல்கிறது.

உலக சிருஷ்டி

     சவுந்தர்யலஹரியில் 41வது சுலோகத்தில் காலாக்னிருத்திரனால் மகாபிரளயத்தில் சாம்பலாக்கப்பட்ட உலகத்தை மீண்டும் உண்டு பண்ணுகின்ற காரணத்திற்காக சித்சக்தியான அம்பிகையே ஆனந்த வைரவியாகவும், ஈசனே ஆனந்த வைரவராகவும் தாண்டவமாடிக் கொண்டிருப்பதால் ஒன்பது விதமான ரகங்களும் வெளிவருகின்றது என்றும் உலக சிருஷ்டியே ஆனந்த வைரவரால்தான் நடப்பதாகவும் மகா காலசம்ஹிதை, காலீதந்திரம், விஞ்ஞானவைரவர் முதலிய சுலோகங்களில் சொல்லப்பட்டுள்ளது. 

வைரவரின் சிறப்பு

          சிவபிரானின் தத்புருஷ முகத்திலிருந்து தோன்றியவர் காசியம்பதியில் சிவகணங்களுக்கு தலைவராக விளங்குபவர். ஆணவம் கொண்ட பிரம்மனின் சிரம் கொய்தவர். மன்மதனின் கர்வம் அடங்கச்செய்தவர். முனிவரின் சாபத்திலிருந்து தேவேந்திரன் மகன் ஜெயந்தனைக்காத்தவர். சனியை சனீஸ்வரராக்கி நவக்கோள்களில் வலிமை வாய்ந்த கோளாக உயர்த்தி பெருமை சேர்த்தவர் என்ற பெருமைமிகு சிறப்புகளைக்கொண்டவர். இவரைக்காலவைரவர், மார்த்தாண்ட வைரவர்,  கேக்ஷத்ரபாலகர், சத்ருசம்ஹார வைரவர் என்று பல பெயர்களில் அழைத்து வழிபடுகிறோம்.

பைரவர்

        சிவரூபமான தட்சிணாமூர்த்தி கல்விக்கும், நடராஜமூர்த்தி நடனத்திற்கும், லிங்கமூர்த்தி அருவ வழிபாட்டிற்கும் வைரவமூர்த்தி காவலுக்கும் அதிபதியாக மக்களால் தொன்றுதொட்டு வணங்கபட்டு வருகிறார்கள்.

      சிவபெருமானின் ஐந்து குமாரர்களாக கணபதி,முருகன்,பைரவர், வீரபத்திரர்,சாஸ்தா என்றும் சொல்லப்படுகிறது. ஐவரில் மகாவைரவர் பொதுவாக எல்லா ஆலயங்களிலும் ஈசான்யமூலை எனப்படும் வடகிழக்கு திசையிலே நிர்வாணக்கோலத்தினறாய், நீலமேனியராய், நாய் வாகனத்துடன் காட்சி தருபவர்தான் பைரவப்பெருமான். காலையில் ஆலயம் திறந்தவுடன்,இரவு அர்த்தஜாமத்தில் பூஜை முடிவுறும் போதும் வைரவருக்கு என்று விஷேசபூஜைகள் செய்யப்படவேண்டும் என்று பார்த்த நித்தியாபூஜா விதி கூறுகிறது. அதேபோல் ஆலயத்தின் மற்ற திருச்சன்னதிகளை பூட்டி சாவியை பைரவர் பாதத்தில் வைத்து விட்டு அதன்பின் வெளிக் கதவை பூட்டிச் சாவியை எடுத்துச் செல்லும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.

உங்கள் கருத்து.....